News December 6, 2025
புதுவை: அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி

திரு-பட்டினம் சதீஷ்குமார் என்ற மாதவராஜ். இவருக்கு இன்னும் திருமணமாக நிலையில், சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
காரைக்காலில் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் நகர காவல் நிலையத்தில் இன்று (07.03.26) காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் மன்றம் எனும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை நேரில் அளித்து தீர்வு காணலாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 6, 2026
புதுச்சேரியில் 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மின்-ஆளுமை சங்கம் இணைந்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கில், IT மற்றும் ITES நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசு மற்றும் முன்னணி IT, ITES நிறுவனங்களுக்கிடையில், மொத்தம் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
News March 6, 2026
புதுச்சேரி: முதலமைச்சர் தலைமையில் ஊதியம் வழங்கல்

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் பாங்கோஸ் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை, (Gratuity) காசோலைகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.


