News March 22, 2025
புதுவை அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

புதுச்சேரி, மூலக்குளம், வில்லியனுார் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகை மாயமாகி இருந்தது.போலீசார் எழிலரசனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Similar News
News March 22, 2025
புதுவையில் 531 பணியிடங்களை நிரப்ப திட்டம்

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நேற்று நடந்த விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ‘தற்போது காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 226 செவிலியர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். டாக்டர்கள், மருந்தாளுநர் பணியிடங்களும் நிரப்பப்படும். 305 ஆஷா பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் சுகாதார நிலையங்களில் பணியாளர்கள் பிரச்னை தீரும்’ என தெரிவித்தார்.
News March 22, 2025
சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற ரூ.3 லட்சம் நிதி : முதல்வர்

புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ”விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சை பெற மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் நிதியும், ஒரு வாரம் சிகிச்சையும் அளிக்கப்படும். மருத்துவமனையில் உள்நோயாளிகளாக கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறளலாம். இத்திட்டத்தை புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
News March 21, 2025
கூட்டுறவு சங்கங்களை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை

புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ பி.ரமேஷ், கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மீண்டும் நடைமுறைக்கு வருமா? எனக் கேட்டிருந்தார். இதற்கு முதல்வர் என்.ரங்கசாமி, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, நலிவடைந்து, செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் அதை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.