News March 27, 2024

புதுவை அருகே காவல்நிலையம் முற்றுகை

image

உருளையன்பேட்டை சேர்ந்த அய்யூப் பெரியமார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடையை அபகரிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் மிரட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து நில அபகரிப்பு கும்பல் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என அத்தொகுதி எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து இன்று திடீரென பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Similar News

News February 8, 2026

புதுச்சேரி: இளைஞர் மீது பாந்த குண்டாஸ்

image

புதுச்சேரி உருவையாரைச் சேர்ந்தவர் பட்ட முருகன்(23). இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட இவரை, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் முருகனை மீண்டும் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

News February 8, 2026

புதுச்சேரி: வங்கியில் ரூ.1 லட்சம் மோசடி – ஒருவர் கைது

image

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(72). இவரின் வங்கிப்புத்தகத்தை திருடிய ஓட்டுநர் ஜெயராமன் என்பவர் அவரின் கையெழுத்தை போலியாகப் போட்டு, வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுத்துள்ளார். இது சிசிடிவி மூலம் உறுதியான பின், மீண்டும் வங்கிக்கு பணம் எடுக்க வந்தபோது, வங்கி ஊழியர்கள் ஜெயராமனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News February 8, 2026

காரைக்கால் மாவட்டத்திற்கு ஆட்சியராக நியமனம்

image

புதுச்சேரி சப்-கலெக்டராக பணியாற்றிய இசித்தாரதி, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிபிரகாஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளராக மாற்றப்பட்டார். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் குலோத்துங்கனுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்புகள் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!