News March 27, 2024

புதுவை அருகே காவல்நிலையம் முற்றுகை

image

உருளையன்பேட்டை சேர்ந்த அய்யூப் பெரியமார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடையை அபகரிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் மிரட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து நில அபகரிப்பு கும்பல் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என அத்தொகுதி எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து இன்று திடீரென பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Similar News

News August 8, 2025

புதுவை: மாணவர்களுக்கு பருவ நிலா கருத்தரங்கம்

image

புதுவைத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகமும் மயூரி சித்திர நாட்டியாலயாவும் இணைந்து நடத்திய பருவ நிலாக் கருத்தரங்கம் அரியாங்குப்பம் முத்தமிழ்க் கலை இல்லத்தில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் முனைவர் இராச.குழந்தைவேலனார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய விருதாளர் மண்ணாங்கட்டி மொழி வாழ்த்து வழங்கினார். இதில் தமிழ்மாமணி முனைவர் வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார்.

News August 8, 2025

புதுவை: எக்ஸ்போ பொருட்காட்சி திறந்து வைப்பு

image

புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறும் தினமலர் எக்ஸ்போ பொருட்காட்சியினை இன்று (ஆகஸ்ட் 8) வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சர் என் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் பொதுப்பணித்துறை அமைச்சர் க லட்சுமிநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொருட்காட்சியினை திறந்து வைத்தனர்.

News August 8, 2025

புதுவை: ஆடி வெள்ளி கிழமையான இன்று இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!

error: Content is protected !!