News October 10, 2024
புதுவையில் 7 பேர் கைது

புதுவை கோரிமேடு வாகன முனையம் அருகே ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோரிமேடு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த 7 நபர்களை விசாரித்த போது, பிரசாத் ராம், அஜித்குமார், புண்ணியமூர்த்தி, அருண்குமார், விக்கி, அரவிந்த் என்பது தெரிய வந்தது விசாரணையில் கொள்ளையடிக்க இருப்பது தெரியவந்தது.
Similar News
News September 14, 2025
புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்!

புதுச்சேரி புதிய நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கடலூர் சாலையில், ரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமான பணிகள் கடந்த ஜூலை.31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட பகுதியாக நாளை(செப்.15) முதல் AFT ரயில்வே கிராசிங்யை முழுமையாக மூடப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 14, 2025
புதுவை மக்களே.. வங்கியில் வேலை வாய்ப்பு!

புதுவை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!
News September 14, 2025
புதுவை: போக்சோ வழக்கில் முதியவர் கைது

புதுவை, மேட்டுப்பாளையத்தில் 11 வயது சிறுமி நேற்று முன்தினம் டியூஷனில் படித்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முதியவர் ஒருவர், சிறுமியை அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின் சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, அந்நபர் அதேபகுதியை சேர்ந்த புஷ்பநாதன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.