News October 21, 2025
புதுவையில் விரைவில் ஐ.டி. நிறுவனம்!

புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கடந்த சில தினங்களுக்கு முன்பு சோஹோ ஐ.டி. நிறுவன தலைவரை நேரில் சந்தித்து புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கு சோகோ நிறுவனத்தின் கிளையை தொடங்க வேண்டும் என்று கேட்டுகொண்டேன். அதன்படி விரைவில் ஐ.டி. நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
புதுச்சேரி: கொட்டும் மழையில் முதல்வர் அஞ்சலி

புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் கொட்டும் கன மழையில், இன்று நடைபெற்ற காவலர் நினைவு தின நிகழ்ச்சியில், கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மழையில் நனைந்தபடி பணியின்போது உயர் நீத்த காவலர்களுக்கு, மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள்.
News October 21, 2025
காரைக்கால்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படியும் காரைக்கால் மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என வரும் செய்திகளை நம்ப வேண்டாம். தானாக சென்று மாட்டிக்கொண்டு பணத்தை இழக்க வேண்டாம். இதுபோன்று சமூக வலைதளங்களில் பல போலி விளம்பரங்கள் உலா வருகின்றது. செயலிகளை முற்றிலும் நம்ப வேண்டாம் என தெறிவிக்கப்பட்டது