News March 25, 2025

புதுவையில் புத்தக வடிவில் ரேஷன் அட்டை – அமைச்சர் அறிவிப்பு

image

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பேசிய அமைச்சர் திருமுருகன், “மீண்டும் புத்தக வடிவிலான ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் மற்றும் நியாய விலை கடைகள் இல்லாத பகுதிகளில் புதிய கடைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காமராஜர் கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகள், வீட்டிற்கான அசல் தொகையை  மட்டும் செலுத்தி பத்திரத்தை பெற்றுகொள்ளலாம்” என தெரிவித்தார்.

Similar News

News March 27, 2025

புதுவை ஆரோவில்லில் ஐஐடி கேம்பஸ்

image

புதுவை ஆரோவில்லில் ஐஐடி மெட்ராஸ் தனது 4வது கேம்பஸை இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாக அதன் இயக்குநர் காமக்கோடி அறிவித்துள்ளார். ஆரோவில்லில் 20 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த பூஜ்ஜிய-உமிழ்வு சோதனை மையம் அமைக்கப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

News March 27, 2025

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, தீர்மானம் நிறைவேற்றம்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மாநில அந்தஸ்து தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ-க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், நாக தியாகராஜன், நேரு(எ)குப்புசாமி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானம் அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே 15 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாத நிலையில் இன்று 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News March 27, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

image

தவளக்குப்பம் அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (42), தொழிலாளி. இவா் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தவளக்குப்பம் போலீஸாா், சுரேஷை கைது செய்தனா். அவா் மீதான வழக்கு விசாரணை, புதுவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.10000 அபராதம் விதித்தும் நீதிபதி சுமதி உத்தரவிட்டாா்.

error: Content is protected !!