News December 19, 2025

புதுவையில் ஊக்கத் தொகை உயர்வு!

image

புதுச்சேரியில், 1 அல்லது 2 பெண் குழந்தைகளைப் பெற்ற குடும்பங்களுக்கு, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கும் ஊக்கத் தொகை தரப்படுகிறது. இதில் குறிப்பாக ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை தற்போது ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என புதுவை அரசு சார்பாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 19, 2025

புதுச்சேரி: விழாக்காலத்தை முன்னிட்டு ஆலோசனை

image

புதுச்சேரி கடலோர காவல் துறையால், வருகிற கிறிஸ்மஸ், நியூ இயர், பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு, கடற்கரைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உயிர்காக்கும் (Lifeguards) வீரர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்த வழிமுறைகள் சீனியர் எஸ்பி கலைவாணன் IPS உத்தரவின்படி, கோஸ்டல் எஸ்பி நலாம் பாபு தலைமை ஆலோசனை வழங்கப்பட்டது.

News December 19, 2025

புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

image

சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி டிஜிபி சாலிணி சிங் உத்தரவுபடி புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை 20ஆம் தேதி சனிக்கிழமை காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முதல் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.

News December 19, 2025

காரைக்காலில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி

image

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், நிரவி காவல் நிலையத்தில், நாளை (20.12.25) சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், மக்கள் மன்றம் எனும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை நேரில் அளித்து தீர்வு காணலாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!