News August 13, 2025

புதுவையில் இளம்பெண் தற்கொலை

image

கிருமாம்பாக்கம், பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபராதி (24). இவருக்கும், நரம்பை கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றுவதால் சொந்த ஊருக்கு வர தாமதம் ஏற்பட்டு, திருமணம் தடைப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமாபாரதி தற்கொலை செய்துகொண்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 13, 2025

புதுச்சேரி காவல்துறையில் வேலை-APPLY NOW

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று (ஆக.13) காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க..

News August 13, 2025

புதுவையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி நிகழ்ச்சி

image

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி – மாநில அளவிலான நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News August 12, 2025

புதுச்சேரியின் பண்டையகால நகரம் பற்றி தெரியுமா?

image

புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு கிராமம் சோழர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு கி.மு 200 முதல் கி.பி 200 வரை கடல் வாணிபம் நடைபெற்றதாக அகழாய்வுகள் தெரிவிக்கின்றது. இங்கிருந்து ரோம் நகரத்திற்கு கடல் வாணிபம் நடைபெற்றுள்ளது. இங்கு ரோம் அரசரின் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இவ்விடத்தை பற்றி பிறருக்கும் பகிரவும்..!

error: Content is protected !!