News January 6, 2026
புதுவையில் இனி துப்பாக்கியுடன் ரோந்து பணி!

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், “போலீசார் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். துணைநிலை ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, பிரெஞ்சு தூதரகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிலையான பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
புதுவை: காவலர் பணிக்கு தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

புதுவை காவல்துறையில், காலியாக உள்ள 148 காவலர் பணியிடங்களை நிரப்ப நடந்த உடல் தகுதியில் தேர்வானோருக்கு பிப் 8-ந் தேதி 5 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான நுழைவுசீட்டை அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தேர்வாணைய சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு காலை 10 முதல் மாலை 5 வரை 0413-2233338 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
News January 31, 2026
புதுவையில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகளை முட உத்தரவு

புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார்
வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் 1-2-26 (ஞாயிற்றுக்கிழமை) புதுவை நகராட்சி பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்படக்கூடாது. இதையும் மீறி செயல்படும் இறைச்சி
கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
News January 31, 2026
புதுச்சேரி: மது கடைகளை மூட உத்தரவு

வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 1) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று கலால்துறை அறிவித்துள்ளது. தடையை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் பகுதியில் நாளை இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படக்கூடாது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


