News February 11, 2025
புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை…

ராயபுரம் துரை தெருவைச் சேர்ந்த விஜயன் (26), ஒண்டி குப்பத்தைச் சேர்ந்த பவித்ரா (24) இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வீடுகளில் இருந்து வெளியேறி 2 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு நெல்லையில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர். 2 நாளிலேயே இருவரும் வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
சென்னை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
News August 14, 2025
சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 17ரயில்கள் ரத்து

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் பொன்னேரி- கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்றும், வரும் 16, 18ம் தேதிகளில் மேம்பாட்டு பணி நடப்பதால் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9:40, பகல் 12:40, சென்ட்ரல்- சூலுார்பேட்டை காலை 10:15, பகல் 12:10, மதியம் 1:05 என மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
ரூ.5,000 கோடியில் சென்னையில் வாட்டர் மெட்ரோ

மெட்ரோ சேவையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோவளம் மற்றும் நேப்பியர் பாலம் இடையே 53 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நேப்பியர் பாலம்- கோவளம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து, தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோவை இயக்குவதற்கு மொத்தச் செலவு சுமார் 3,000 முதல் 5,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்து.