News October 22, 2025

புதுச்சேரி: 450 டன் குப்பைகள் அகற்றம்

image

புதுச்சேரியில் (20.10.2025) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மக்கள் புத்தாடை உடுத்தி தீபாவளி பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சுமார் 450 டன் குப்பைகள் சேர்ந்திருந்தன. இதனை நேற்று முழுவதும், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் துப்பரவு பணியாளர்கள் கொட்டும் மழையிலும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

Similar News

News October 23, 2025

புதுச்சேரி: கடந்தாண்டை விட 45% மாசு குறைவு

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்ட நிலையில், மாசு கட்டுப்பாட்டு குழுமம் பதிவு செய்த காற்று மாசுபாடு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை மாசு, கடந்தாண்டை விட 45 சதவீதம் குறைந்ததுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தீபாவளியின் போது உருவாகும் காற்று மற்றும் ஒலி மாசுவை அளவீடு செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

News October 22, 2025

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

வீடுர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதுச்சேரி சக்கரா பரணி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்காலம் எனவும் கூறியுள்ளார்.

News October 22, 2025

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

வீடுர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதுச்சேரி சக்கரா பரணி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்காலம் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!