News October 31, 2025

புதுச்சேரி: மூன்று நாட்களில் 64 பேர் கைது

image

புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள மதுபானக்கடைகளையே நாடுகின்றனர். மது அருந்தி விட்டு அவர்கள் ரகளையில் ஈடுபடுகின்றனர். கடந்த மூன்று நாட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில் 64 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

புதுவையில் முகவர்களின் ஆலோசனை கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருவதன் தொடர் நிகழ்வாக, இன்று புதுவை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஏம்பலம் மற்றும் பாகூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கலந்து கொண்டனர்.

News October 31, 2025

புதுச்சேரி: கவர்னரிடம் கோரிக்கை மனு

image

மோந்தா புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பகுதி மக்களுக்கு போதுமான உதவி வழங்கவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ், புதுச்சேரி ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ் நாதன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

News October 31, 2025

புதுச்சேரி: மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து

image

புதுச்சேரி, காவல்துறை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்தந்த காவல் நிலையங்களில், மக்கள் குறை தீர்வு நாள் முகாம் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, காவல் நிலையங்களில் நடைபெற இருந்த மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!