News January 18, 2026
புதுச்சேரி: மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

புதுவை நெல்லித்தோப்பை சேர்ந்தவர் பசுபதி(31). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி ரம்யா, பசுபதியை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த படுபதி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 25, 2026
புதுச்சேரிக்கு புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம். புதுச்சேரிக்கு புதிதாக இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய தம்பதிகள் திவ்யா மற்றும் ராகவ் ஆகிய இருவரும் தற்போது புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் புதுச்சேரி ஐ.ஜி வேறு மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 25, 2026
புதுச்சேரி: 12th போதும்..அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
JUST NOW: புதுச்சேரியை சேர்ந்தவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், 2026-ம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய தற்காப்புக் கலை ஜாம்பவான் பூரணங்குப்பம் பழனிவேலுக்கு, கலைத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்படுவதாக, மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.


