News April 5, 2026
புதுச்சேரி: மதுக்கடைகள் மூடப்படும் – எச்சரிக்கை..!

புதுச்சேரியில் உள்ள பல மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விடுதிகள், விற்பனையின் போது முறையான ரசீதுகளை வழங்குவதில்லை என தொடர் புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து, புதுச்சேரி கலால்துறை விதிகளை மீறி ரசீது இன்றி மதுபானங்கள் விற்பனை செய்தால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 5, 2026
புதுச்சேரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<
News April 5, 2026
புதுச்சேரியில் 12 பார்களுக்கு கலால் துறை சீல்

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மதுபானங்களை ரசீதுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கலால் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மதுபான கடைகளில் ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, கலால் துறை வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் நேற்று சோதனை செய்து ரசீது இல்லாமல் மது விற்பனை செய்த 12 பார்களுக்கு சீல் வைத்தனர்.
News April 5, 2026
புதுச்சேரி: திருமாவளவன் பிரச்சார வருகை ரத்து

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருந்த தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (05-04-2026) கலந்து கொள்ள இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் அரிமா தமிழன் தெரிவித்துள்ளார்.


