News January 22, 2026
புதுச்சேரி மகளிர் மேம்பாட்டுத் துறை முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய மற்றும் மாநில அரசு துறைகள், பொதுத்துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் 10 பேருக்கு மேல் பணிபுரியும் ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள நிறுவனங்களில் உட்குழுக்கள் கட்டாயம் அமைக்க வேண்டும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
புதுவையில் ஆட்டோ ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு

புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (55). இவர் குடிப்பழக்கத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். மேலும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், மன உளைச்சலால் நேற்று முன்தினம் வீட்டு சமையலறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
புதுச்சேரியில் நிதியுதவி தவணை வழங்கல் விழா

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.
News January 28, 2026
புதுச்சேரியில் நிதியுதவி தவணை வழங்கல் விழா

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.


