News October 26, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன், விபத்துளில் சிக்குகின்றனர். கால்நடைகளை சாலைகளில் திரியவிடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் கால்நடைகளை பிடித்து அபராத தொகை ரூ.5 ஆயிரம் உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 12, 2026
புதுவை: அரசு பணிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

புதுவை, தேர்வு ஆணையம் அரசு பணிகளுக்கு தேர்வு அட்டவணை நேற்று வெளியிட்டுள்ளது. ஜூனியர் நூலக உதவியாளர், தொகுப்பு (கேலரி) உதவியாளர்களுக்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலைத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடக்கிறது. எல்.டி.சி., ஓவியர் பணிக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு முதல் தாள் வரும் 31-ம் தேதி காலையும், 2-ம் தாள் மதியமும் நடக்கிறது. ஓவியருக்கான திறன் தேர்வு ஜூன் 7-ம் தேதி காலை நடக்க உள்ளது.
News February 12, 2026
புதுச்சேரி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

புதுச்சேரி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <
News February 12, 2026
புதுவையில் 3 பேரிடம் ரூ.1.46 லட்சம் அபேஸ்

முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒருவரிடம் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வங்கி அதிகாரி எனக் கூறி, கடன் வரம்பை அதிகரித்து தருவதாக லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர், அந்த லிங்கை ஓபன் செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 மாயமானது. இதேபோல் கோரிமேடில் ரூ.40,800, வைத்திக்குப்பத்தில் ரூ.15,399 என 3 பேர் ரூ.1,46,199 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


