News March 29, 2025
புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு தலைமை பொறியாளர் நியமனம்

புதுச்சேரி பொதுப்பணித்துறை [சிடிசி] சர்க்கிள் – 1 கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் வீரசெல்வத்திற்கு புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருந்த தீனதயாளன் சமீபத்தில் லஞ்ச புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வீரசெல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News March 31, 2025
வங்கி அதிகாரி போல் பேசி 11,000 மோசடி

புதுச்சேரி ஜான்சி நகரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி, வங்கி விவரங்களை கேட்டுள்ளனர். இதனை நம்பி சரவணனும் மர்ம நபருக்கு வங்கி விவரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.11 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News March 31, 2025
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலா நகரமான புதுச் சேரிக்கு, வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். கடந்த சில வாரங்களாக பிளஸ் 2 பொதுத்தேர்வு காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் ரமலான், யுகாதி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் முதல் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
News March 31, 2025
புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field Investigator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்ப உள்ளதாகவும், 04.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.