News April 28, 2025
புதுச்சேரி: பெயிண்டருக்கு கத்தி வெட்டு

உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கிருஷ்ணகாந்த்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கிருஷ்ணகாந்த்தை சந்தோஷ், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 28, 2025
புதுவை வெண்கட்டா நகர் பகுயிதியில் மின் தடை அறிவிப்பு

புதுவை வெங்கட்டா நகர் மின் நிலையத்தில் நாளை (29-4-25) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 1 மணி வரை ரெயின்போ நகர், செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர் , திருவள்ளுவர் நகர், பெருமாள் கோவில் வீதி, தியாகராஜா வீதி, அண்ணா சாலை, கருவூலசாலை, காந்தி வீதி, பாரதி வீதி, ஜமீன்தார் கார்டன்மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை என மின்துறை அறிவித்துள்ளது.
News April 28, 2025
புதுச்சேரி: குடிபோதையில் ரகளை-வாலிபர் கைது

வில்லியனூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மதுபானக்கடை அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News April 28, 2025
புதுச்சேரி: மின்தடை புகார்களுக்கான எண்

புதுச்சேரியில் ஏற்படும் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, சூப்பரண்டிங்க் என்ஜினியர் மற்றும் துறைத் தலைவர் மின்னஞ்சல் முகவரி : se1ped.pon@nic.in மற்றும் தொலைப்பேசி எண்: 0413-2334277. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…