News April 28, 2025
புதுச்சேரி: பெயிண்டருக்கு கத்தி வெட்டு

உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கிருஷ்ணகாந்த்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கிருஷ்ணகாந்த்தை சந்தோஷ், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 30, 2025
புதுவை: கத்தியை காட்டி மிரட்டல்-வாலிபர் கைது!

புதுவை மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, முத்திரையர்பாளையம் காந்தி வீதியில் ஒருவர் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், ரகளையில் ஈடுபட்ட முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (30) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
News October 30, 2025
முதலியார் பேட்டை: போதையில் ரகளை செய்தவர் கைது

புதுவை முதலியார் பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மதுபான கடை அருகே ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் ரகளை செய்ததை கண்டு அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முதலியார் பேட்டை சேர்ந்த மேகி (31) என்று தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News October 29, 2025
காரைக்காலில் புகையிலை ஒழிப்பு குறித்து ஆலோசனை

காரைக்கால் மாவட்ட இளைஞர்கள் புகையிலை ஒழிப்பு இயக்கத்திற்கான மாவட்ட பணிக்குழு கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் “புகையிலை இல்லா இளைஞர் இயக்கம்” குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காரைக்கால் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர். சிவராஜ்குமார், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


