News December 29, 2025
புதுச்சேரி: துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர், துணை ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
புதுச்சேரிக்கு விரைவில் புதிய முக்கிய திட்டங்கள்

புதுச்சேரி மாநிலத்திற்காக பல மகத்தானதிட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். அடுத்த முறை பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகை புரியும் போது, அந்த திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என்றும் அவர் கூறினார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் பல முக்கிய திட்டங்கள் வெளிப்படும் என்றும் உறுதியளித்தார்.
News December 29, 2025
புதுச்சேரி: 12th போதும் அரசு வேலை ரெடி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 29, 2025
புதுவை: துணை குடியரசு தலைவர் புகழாரம்

புதுச்சேரியில், இன்று (29.12.2025) புதுவை வந்துள்ள துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியது, புதுவை ஒரு தொன்மையான நாகரீகம் மட்டுமின்றி அன்பு அரவணைப்பு போன்ற நிரந்தர மாண்புகளை உலகிற்கு பறைசாற்றும் நகரமாகவும் புதுவை திகழ்வதாக கூறினார். நிகழ்வின் போது புதுவை முதல்வர், உள்துறை அமைச்சர், ஆளுநர் என பலரும் உடனிருந்தனர். துணை குடியரசுத் தலைவருக்கு மரியாதை சே செய்யப்பட்டது.


