News August 26, 2025
புதுச்சேரி: டாக்டர் தற்கொலை!

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்பாபு (24), எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக நுழைவு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தார். இதனால் மனமுடைந்த வெங்கடேஷ்பாபு நேற்று காலை, அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முதலியார் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 26, 2025
புதுவை: வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகம், வேலையில்லாத விவசாயப் பட்டதாரிகள் மற்றும் வேளாண் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பெற, உங்கள் பகுதிக்குரிய உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News August 25, 2025
புதுச்சேரி: செல்வ வளம் வேண்டுமா? இங்கு செல்லுங்கள்!

புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் உள்ளது. இது சனிபகவான் ஸ்தலமாகவும் அறியப்படுகிறது, இங்கு சனிக்கு உரிய பரிகாரங்களை செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கோயிலுக்குச் செல்வதால் சனி தோஷங்கள் நீங்கி, நல்வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 25, 2025
புதுச்சேரி: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள்<