News February 7, 2026
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச மாநாடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதிநவீன விபத்து சிகிச்சை குறித்த சர்வதேச உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு, நவீன சிகிச்சை முறைகள் குறித்து கருத்துப் பகிர்வு செய்தனர்.
Similar News
News February 10, 2026
புதுச்சேரி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 10, 2026
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

புதுச்சேரி தொழிலாளர் நலத் துறையின் சமூகப் பாதுகாப்பு வாரிய தொழிலாளர் அதிகாரி வெளியிட்ட செய்தியில், “அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை எல்ஐசி மூலம், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. பொது சேவை மையத்தைப் பயன்படுத்தி இதில் சேரலாம்.” என கூறியுள்ளார்.
News February 10, 2026
அதிக வருகைப் பதிவு வைத்துள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை

பள்ளி கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும், 97 சதவீதத்திற்கும் மேல் வருகைப் பதிவு பெற்றிருக்கும் மாணவர்கள் அரசின் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.1.92 லட்சம் நிதிக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் 957 மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.” என கூறப்பட்டுள்ளது.


