News April 6, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்
Similar News
News November 6, 2025
புதுவை: மர்மமான முறையில் கூலி தொழிலாளி இறப்பு

பாகூர் அடுத்த பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் முத்து, சுமை தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில், வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். பின், பெரிய ஆராய்ச்சி குப்பதில் சாலையோரமாக மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்தில், தலையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து எவ்வாறு இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.
News November 6, 2025
புதுவை ஜிப்மெரில் பிரெஞ்சு-இந்தியா கூட்டு கல்வி திட்டம்

புதுவை ஜிப்மரில் தாவரங்கள், AI மூலம் மருத்துவ கல்வி ஆராய்சிக்கான இந்திய, பிரெஞ்சு கூட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பிரான்சை சேர்ந்த தலா 4 கல்வி நிறுவனங்கள், கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கல்வியை பரிமாறுகின்றன. இத்திட்டத்தை புதுவை பிரெஞ்சு தூதர் எட்டியென் ஹாலண்ட், பிரெஞ்சு ஒருங்கிணைப்பாளர் அன்டோயின் நில்லேமெட், ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
News November 6, 2025
புதுவை: தேர்வு இல்லை-அரசு வேலை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


