News November 15, 2025

புதுச்சேரி: காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம்

image

ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரு வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, 4 போலீசாருடன் வேனில் ஏனாம் சென்ற போது, அவர்கள் கள் குடிப்பது போலவும், குத்தாட்ட பாடல்களைப் போட்டு கொண்டு நடனமாடி மகிழ்ந்தது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து டிஜிபி நேற்று உத்தரவிட்டார்.

Similar News

News November 15, 2025

புதுவையில் கத்தியுடன் சுற்றிய வாலிபர்

image

புதுவை ரெட்டியபார்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, உழவர்கரை வயல்வெளி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் போலீசார் அவரை சோதனையிட்டபோது, அவரிடம் கத்தி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் உழவர்கரைச் சேர்ந்த பிரேம்குமார் என தெரியவந்தது. இதனையடுத்து உடனே அவரை கைது செய்தனர்.

News November 15, 2025

புதுவை: போலி பங்கு சந்தை மூலம் ரூ.2.5 கோடி மோசடி

image

புதுவை ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதனை நம்பி அவர் சுமார் ரூ.2.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ரூ.12.5 லட்சம் லாபம் கிடைத்ததாக காண்பித்துள்ளது. ஆனால் அதனை தனது வங்கிக்கு மாற்ற இயலாது, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News November 15, 2025

புதுவை: இலவச நண்டு வளர்ப்பு பயிற்சி

image

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 21-ம் தேதி அன்று காரைக்காலில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் கூண்டு முறையில் கல் நண்டு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கூண்டு முறையில் கல் நண்டு வளர்ப்பு முறை நீர் மேலாண்மை பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க 8778608187 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!