News April 9, 2025
புதுச்சேரி – கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

புதுவை மாநிலம், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை (10ம் தேதி) நடக்கிறது. இதனால், புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கன்னியகோயில் புதிய பைபாஸ் வழியாக செல்லும்.
Similar News
News August 5, 2025
கடலூர் மக்களே.. இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.
News August 5, 2025
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குண்டாஸில் இளைஞர் கைது

கடலூரை சேர்ந்த 12 வயது சிறுமி, கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அம்மாணவியை கிள்ளை எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த இமயவரம்பன்(25), என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இந்நிலையில், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைபடி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் இமயவரம்பன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News August 5, 2025
கடலூர்: டிகிரி போதும் அரசு வேலை!

கடலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <