News November 23, 2025

புதுச்சேரி: ஓவியக் கண்காட்சி துவக்கம்

image

புதுச்சேரி, கவர்னர் மாளிகை அருகில் உள்ள வளர் கலைக்கூட அரங்கத்தில், ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 27ம் தேதி வரை நடக்கும், கண்காட்சியை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம். கண்காட்சியை இந்திரா காந்தி தேசிய கலை மைய முன்னாள் மண்டல இயக்குனர் கோபால் துவக்கி வைத்தார். பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறை தலைவர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

Similar News

News November 24, 2025

புதுச்சேரி: சீமான் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு!

image

புதுச்சேரி, வில்லியனூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளரை தகாத வார்த்தைகளால் பேசியும், தனது கட்சியினரை கொண்டு தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 3 பேர் மீது, வில்லியனூர் காவல் நிலைய போலீசார்
296 b தகாத வார்த்தையில் திட்டுதல், 115(2) தாக்குதல், 351 (2) கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் நேற்று வழக்கு பதிந்தனர்.

News November 24, 2025

சீமானுக்கு புதுச்சேரி திமுக கண்டனம்

image

புதுச்சேரி, திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, முறையாக பதில் கூறாமல் எஸ்ஐஆர் குறித்து கேள்வி எழுப்பிய கலைஞர் தொலைக்காட்சி நிருபர் மீது, தாக்குதல் நடத்திய சீமான் மற்றும் அவரது கூட்டத்திற்கு, புதுச்சேரி மாநில திமுக தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

News November 24, 2025

புதுவை: இளம் பெண் தற்கொலை

image

புதுவை, முதலியார்பேட்டை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, இவர் தனியார் பள்ளி ஆசிரியர், இவரது மூத்த மகள் பவித்ரா என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு வேலைக்காக போட்டி தேர்வு எழுதி வந்தார். இந்தநிலையில் மேல்நிலை, இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர்.

error: Content is protected !!