News November 6, 2025
புதுச்சேரி: ஊழியருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

புதுச்சேரி, போலி சான்றிதழ் கொடுத்த குமாரவேல் மீது, பாப்ஸ்கோ நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் நடராஜன் அளித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து குமாரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி கோர்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சேரலாதன், பதவி உயர்விற்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்த குமாரவேலுக்கு 6 நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News November 6, 2025
புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!
News November 6, 2025
புதுவை- கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

புதுவை நோணாங்குப்பம் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (நவ.6) இரவு 10 மணி முதல் நாளை (நவ.7) காலை 6 வரை, புதுச்சேரி – கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுவையில் இருந்து கடலுார் நோக்கி செல்லும் வாகனங்கள் அரும்பார்த்தபுரம் பைபாஸ் வழியாகவும், கடலுாரில் இருந்து புதுவை நோக்கி செல்லும் வாகனங்கள் தவளகுப்பத்தில் திரும்பி பைபாஸ் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
News November 6, 2025
புதுச்சேரி: 10th போதும்..அரசு வேலை!

புதுச்சேரி மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 69 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது, சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.1,77,500 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-11-2025 தேதிக்குள் <


