News September 14, 2024
புதுச்சேரி ஊர்க்காவல்படை வீரர்களுக்கு சம்பள உயர்வு

புதுச்சேரியில் தற்போது ஊர்காவல்படை வீரருக்கு தினசரி வழங்கப்படும் சம்பளம் ரூ.1056ல் இருந்து ரூ.1085 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக 29 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை கவர்னரின் உத்தரவின்படி உள்துறை செயலர் ஷிரன் நேற்று பிறப்பித்துள்ளார். இந்த சம்பள உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உள்துறை தெரிவித்துள்ளது
Similar News
News September 15, 2025
“ஆட்சியாளர்கள் வேகத்திற்கு அரசு நிர்வாகம் இல்லை”-முதல்வர்

புதுச்சேரி அண்ணா சாலையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “அரிக்கன்மேடு பழமையான கலாச்சாரத்தின் பிம்பம். அதை பெரிய சுற்றுலா இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆட்சியாளர்களால் எடுக்கும் வேகத்திற்கு இப்பணி இருக்க வாய்ப்பில்லை. அதுமாதிரி அரசு நிர்வாகம் உள்ளது. கடந்த 2003ல் தொடங்கினோம் தற்போது 2025 ஆகிவிட்டது.” என கூறினார்.
News September 15, 2025
புதுச்சேரி: டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரியில் என்.ஆர் கோப்பைக்கான ஆல் இந்தியா லெவல் டென்னிஸ் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கோரிமேட்டில் தொடங்கியது. போட்டியில், தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 553 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.நேற்று இரவு இறுதிப் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
News September 15, 2025
புதுச்சேரி: எம்.எல்.ஏ நேரு கோரிக்கை

புதுச்சேரியில் தமிழுக்காக போராட்டம் நடத்துபவர்கள் வணிக நிறுவனங்களுக்கு சென்று விளம்பரம் மற்றும் பெயர்ப் பலகைகளை அடித்து நொறுக்குவது ஏற்புடையதல்ல. தமிழுக்கான இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை நொறுக்கி சேதப்படுத்துவது வருந்தத்தக்கது. எனவே இச்செயலில் ஈடுபட வேண்டாம் என எம்.எல்.ஏ நேரு தெரிவித்துள்ளார்.