News November 26, 2025
புதுச்சேரி: ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஜ்ராஜ் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட கூடாது. சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் பொதுமக்களுக்கு இடையூராக கால்நடைகளை திரிய விட கூடாது. தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு லேசான காது வலி ஏற்பட்டது, இதனையடுத்து அவர் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அனுப்பினர். மேலும் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், துணைநிலை ஆளுநர் சிகிச்சை பெற்று சென்றது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
News November 28, 2025
BREAKING புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
News November 28, 2025
புதுச்சேரி: வங்கி வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


