News December 31, 2025
புதுச்சேரி அரசின் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை ஜனவரி 3 முதல் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பம் அட்டைக்கும் வழங்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News January 10, 2026
புதுவை: ரவுடிகள் உட்பட 8 பேர் கைது

திருக்கனூர் அடுத்த வாதானூர் மின்துறை அலுவலகம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, தலைமை காவலர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து, 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 10, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT
News January 10, 2026
புதுவை – திருப்பதி ரயில் நேரம் மாற்றம்

புதுவையிலிருந்து தினமும் இயக்கப்படும் திருப்பதி பயணிகள் ரயில் நேரம் ஜன.19 முதல் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி புதுவை ரயில் நிலையத்தில் இந்த ரயில் தினமும் பிற்பகல் 2:50 மணிக்கு புறப்படுகிறது. இனி இது பிற்பகல் 2:40-க்கு புறப்படும். வில்லியனூா் ரயில் நிலையத்தில் இந்த ரயில் 2:59 முதல் 3 மணி வரை நின்று செல்லும். ஆனால் இனி இந்த ரயில் அங்கு 2:49 முதல் 2:50 வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


