News January 3, 2026
புதுச்சேரியில் 8,781 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் 2025-ம் ஆண்டு காவல் நிலையங்களில் 8,781 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2024-ஐ விட 1,534 வழக்குகள் அதிகம் என புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். ரெட்டியார் பாளையத்தில் 1,395 வழக்குகள், மேட்டுப்பாளையத்தில் 215, லாஸ்பேட்டையில் 282, கோரிமேட்டில் 261, சேதரப்பட்டில் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளனர்.
Similar News
News February 9, 2026
44 பதக்கங்களை குவித்த புதுச்சேரி வீரர்கள்

புனேவில் எட்டாவது தேசிய அளவிலான மாஸ்டர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இவர்கள் 12 தங்கம், 11 வெள்ளி, 21 வெண்கல மொத்தம் 44 பதக்கங்களை பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதனை தொடர்ந்து, நேற்று லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
News February 9, 2026
புதுவை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு<
News February 9, 2026
புதுச்சேரி: 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள்

தேர்தல் நேரம் நெருங்குவதால், புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. புதுச்சேரி நகரில் மட்டும் 15 இடங்களில் இந்தச் சாவடிகள் உடனடியாக அமைக்கப்பட உள்ளன. காரைக்காலில் 10, ஏனாமில் 10 மற்றும் மாஹேவில் 6 என மாநிலம் முழுவதும் தேர்தல் துறை இதற்கான டெண்டர் கோரியுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


