News March 21, 2025

புதுச்சேரியில் ரூ.1000 கேட்டு குவிந்த பெண்கள் 

image

மகளிருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,000 உதவித்தொகை கேட்டு புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர். அவர்களிடம், இதுவரை அரசிடம் இருந்து எந்த ஆணையும் வரவில்லை. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பின்பே உதவித்தொகை வழங்கும் பணி பயன்பாட்டுக்கு வரும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News

News April 20, 2025

இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 20, 2025

புதுவை: வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

image

வில்லியனூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தரராஜன். இவர், குடிப்பழக்கம் உள்ள நிலையில், வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாகவும், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நேற்று காலை அதே பகுதி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

புதுவை: கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம்

image

புதுவையில் ஊசுட்டேரி கிராமத்தில் பழங்குடி இன தாவரங்கள் விலங்குகள் என இயற்கையின் பாரம்பரியத்துடன் இருப்பதுதான் ஊசுட்டேரி சதுப்புநிலம். இங்கு பசுமையான சூழலில் வியக்கும் அழகோடு இந்த ஏரியில் படகு சவாரி செய்தும். இயற்கையின் அழகியலை புகைப்படங்களாக பதிவு செய்யவும் இந்த கோடை விடுமுறையில் மக்கள் வருகின்றனர். 390 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி நம்மை நிச்சயம் இயற்கையின் அழகில் திகைக்க வைக்கும். SHARE IT.

error: Content is protected !!