News May 14, 2024
புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு அபராதம்

இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3 ஆம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
Similar News
News March 5, 2026
புதுவை: கஞ்சா விற்ற இருவர் கைது

புதுவை மங்கலம் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் உறுவையாறு திருக்காஞ்சி மெயின் ரோடு ஆண்டியார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உறுவையாறு புதுநகரை சேர்ந்த முகிலன் (20), கரிக்கலாம்பாக்கம் தமிழரசு (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News March 4, 2026
புதுவை: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

புதுவை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. இங்கு <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…
News March 4, 2026
புதுச்சேரி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.


