News March 1, 2026
புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏ மரணம்

புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நாராயணசாமி (74), மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2006 தேர்தலில் காங்கிரஸில் சீட் கிடைக்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வில்லியனூர் தொகுதி எம்எல்ஏ-வாகவும், அரசு சாராய ஆலை தலைவராகவும் பணியாற்றினார்.
Similar News
News March 7, 2026
புதுச்சேரி: மென்பொருள் பொறியாளர் தற்கொலை

கோட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் இருந்த மாத்திரைகளை மிக்ஸியில் அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 7, 2026
புதுச்சேரி: 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மின்-ஆளுமை சங்கம் இணைந்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கில், IT மற்றும் ITES நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசு மற்றும் முன்னணி IT, ITES நிறுவனங்களுக்கு இடையில் மொத்தம் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
News March 7, 2026
காரைக்காலில் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் நகர காவல் நிலையத்தில் இன்று (07.03.26) காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் மன்றம் எனும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை நேரில் அளித்து தீர்வு காணலாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


