News October 25, 2025
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை!

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “வடகிழக்கு பருவமழையால் புதுவையில் மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் அடுத்த 15 நாட்களுக்குள் அதிக மழையுடன் சுமார் 55 கி.மீ வேகத்தில் 2 புயல்கள் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அனைத்துவிதமான பேனர், கட்-அவுட் வைக்க வரும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.” என அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 3, 2026
புதுச்சேரி: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News February 3, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் இருந்தால் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News February 3, 2026
புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி நவோதயா வித்யாலயாவில் 2026–27 கல்வியாண்டிற்கான 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 7ஆம் தேதி நடைபெறும் என பள்ளி முதல்வர் கண்ணதாசன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனுமதி சீட்டுடன் நேரத்தில் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!


