News August 2, 2024
புதுச்சேரியில் நாளை விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வான ஆடி பெருக்கை உற்சாகமாக கொண்டாட உள்ளனர். இதையடுத்து புதுச்சேரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்.
Similar News
News September 16, 2025
புதுச்சேரி: மின் இணைப்பு துண்டிக்கப்படும், எச்சரிக்கை!

மின்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வில்லியனுார், பூமியான்பேட், லாஸ்பேட், கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுார், காட்டேரிக்குப்பம் ஆகிய அலுவலகத்திற்கு உட்பட மின் நுகர்வோர்கள், தங்களுடைய மின் கட்டண பாக்கியை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT
News September 16, 2025
புதுச்சேரி: ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
புதுவை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க உத்தரவு

மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குறைதீர் கூட்டத்தில் பேசுகையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பதை கண்காணிக்க நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பைகள் கிடப்பதை ஒழுங்குபடுத்த சிறப்பு தூய்மை பணி திட்டம் உருவாக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.