News October 31, 2025
புதுச்சேரியில் கால்நடை துறை அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி அரசின் இணை செயலாளர் பத்மநாபன் சுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், “கால்நடை அபிவிருத்தி பிரிவு இணை இயக்குநர் செந்தில்குமார் கால்நடை மருத்துவ கல்லுாரி நிர்வாக துணை பதிவாளராக நியமித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோழி அபிவிருந்தி பிரிவு இணை இயக்குநர் குமாரவேல், கால்நடை உற்பத்தி பிரிவு இணை இயக்குநராகவும், இடமாற்றம் செய்யப்பட்டார்.” என தெரிவிக்கப்பட்டுய்ள்ளது.
Similar News
News October 31, 2025
புதுச்சேரி: நாளை விடுதலை நாள் விழா அணிவகுப்பு

புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை (நவம்பர் 1) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நாளை நடைபெறும் விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்ற உள்ளார்.
News October 31, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.எஸ்.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விடுங்கள். உங்களுடைய சிம்கார்டு ஆதார்கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி அதில் AWALA பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்றும், அந்த பணம் தீவீரவாத செயலுக்கு பயன்படுத்த பட்டுள்ளது என்றும் மிரட்டி பணம் கேட்டால் நம்ப வேண்டாம்.” என கூறியுள்ளார்.
News October 31, 2025
புதுச்சேரி: மூன்று நாட்களில் 64 பேர் கைது

புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள மதுபானக்கடைகளையே நாடுகின்றனர். மது அருந்தி விட்டு அவர்கள் ரகளையில் ஈடுபடுகின்றனர். கடந்த மூன்று நாட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில் 64 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


