News June 14, 2024
புதுச்சேரியில் கட்டிட கழிவுகளை அகற்றாவிட்டால் அபராதம்

புதுச்சேரி உள்ளாட்சி துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு தனியார் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளில் உருவாகும் கட்டிட கழிவுகள் ஒழுங்கற்ற முறையில் பொது சாலைகளில் தேக்கி வைத்து உள்ளனர் இதனை உரிமையாளர்கள் அகற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் நகராட்சியே அக்கழிவுகளை அகற்றி அபராதம் விதிக்கப்படும் என்றார்
Similar News
News August 5, 2025
புதுச்சேரி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ சேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <
News August 5, 2025
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

திருக்கனுார் கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு அய்யனாரப்பன் கோவில் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகேசன் மீது மோதி, நிற்காமல் சென்றுள்ளது. இதில், படுகாயமடைந்த முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News August 5, 2025
புதுவையில் 182 போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கல்

புதுச்சேரி காவல்துறையில் உள்ள போலீசாருக்கு பல்வேறு கட்ட பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது 32 போலீசாருக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாகவும், 150 போலீசாருக்கு ஏட்டாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.