News November 30, 2025
புதுச்சேரியில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து டிட்வா புயல் நெருங்கும் நேரத்தில் புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
புதுச்சேரி: விடுமுறை மாற்றம் – அரசு அறிவிப்பு

புதுச்சேரி அரசு செயலர் ஹிரன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அடில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை ஒட்டி புதுவைக்கு நாளை அரசு விடுமுறை மற்றும் அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை,
டிச.4ஆம் தேதி என்பதிற்கு பதிலாக, இன்று டிச.3ம் தேதிக்கு என திருத்தம் செய்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
BREAKING: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக சில நாட்களாக புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனாக் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், நாளை (டிச.3) புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 2, 2025
புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.


