News February 6, 2026
புதுச்சேரியில் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம். குடும்ப தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
புதுவை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 13, 2026
புதுவை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <
News February 13, 2026
புதுவை: ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு

புதுச்சேரி, பாகூர் பகுதியில் உள்ள சரவணா கிரீன் சிட்டியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிகிச்சைக்காக மதுரை சென்றுள்ளார். இந்த நேரத்தில், வீட்டின் பின்புற இரும்பு வாசலை உடைத்து, அலமாரியில் இருந்த இரண்டரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் தற்போது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


