News November 13, 2025
புதுச்சேரியில் இளைஞர் வெட்டி படுகொலை

புதுச்சேரி மாநிலம் சாரப் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், ரெயின்போ நகர் பகுதியில் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்பு யார் எதற்காக வெட்டினார்கள் என்று கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
Similar News
News November 13, 2025
புதுவை: 3 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!

புதுவை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை செய்கின்றனர். இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவித்தால், 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News November 13, 2025
புதுவை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்த எதிர்ப்பு

புதுவை, லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வீடுகளில் நேற்று பழுதடைந்த மின் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி நடந்தது. இதை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ வைத்தியநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதிக்கு சென்று ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்துறை இளநிலை பொறியாளர் பவித்ரன் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
புதுவை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


