News August 31, 2025
புதுச்சேரியில் இன்று மதுபான கடைகள் மூடல்

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் இன்று மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் உத்தரவிட்டுள்ளார். ஊா்வலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நலன்கருதி இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊா்வலம் காமராஜா் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி எஸ்.வி.பட்டேல் சாலை,வழியாக கடற்கரை சாலைக்குச் செல்கிறது.
Similar News
News September 1, 2025
புதுச்சேரி: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

புதுச்சேரியில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 0413-2227518 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News September 1, 2025
காரைக்காலில் புதிய துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

காரைக்கால் மாவட்டத்தின் புதிய துணை ஆட்சியராக பூஜா அவர்களை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை மாவட்ட ஆட்சியர் பூஜா அவர்களுக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
News September 1, 2025
புதுச்சேரி: அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் இளைஞர்களே நாகையில் உள்ள கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. செப் 18 முதல் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிகல், க்ளர்க் , பிரிவுகள் சேர்வதற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும். புதுவையை சேர்ந்தவர்கள் செப். 18 ஆம் தேதி கலந்துகொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே <