News January 7, 2026
புதுக்கோட்டை: 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் தகவல்!

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 30 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம்முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 14, 2026
புதுகையில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம்

புதுகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ், மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை செயல்படும் இம்மையத்தில் பல்வேறு குறைபாடு உள்ளவர்களுக்கு உயர்தர மறுவாழ்வு பயிற்சிகள் தகுதியான பயிற்சியாளர்களால் வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News April 14, 2026
புதுக்கோட்டை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

புதுக்கோட்டை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News April 14, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை(ஏப்.15) சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செல்லவிருப்பதால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அருணா தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.!


