News June 18, 2024
புதுக்கோட்டை: 4 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து நேற்று(ஜூன் 17) 241 விசைப்படகுகளில் 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களில் சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற சிபிராஜ், பாலச்சந்திரன், சாரதி, ராமதாஸ் ஆகியோர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்துச் சென்றனர்.
Similar News
News August 16, 2025
புதுக்கோட்டை மாவட்ட டி.எஸ்.பி எண்கள்!

புதுக்கோட்டை மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய காவல்துணை கண்காணிப்பாளர் எண்கள்.
▶️ புதுக்கோட்டை – 04322-222236
▶️ அறந்தாங்கி – 04371-220562
▶️ கீரனூர் – 04339-262241
▶️ பொன்னமராவதி – 04333-262160
▶️ ஆலங்குடி – 04322-251320
▶️ கோட்டைப்பட்டினம் – 04371-260350
▶️ இலுப்பூர் – 04339-472525 ஆகியவை ஆகும். இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News August 16, 2025
புதுக்கோட்டை கோயில்களில் சமபந்தி விருந்து

புதுக்கோட்டை, ஆக.15 – சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட இந்து சமய அறநிலைத் துறைக்குட்பட்ட கோயில்களில் சமபந்தி (பொது விருந்து) நடைபெற்றது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த விருந்தில் மாவட்ட ஆட்சியர் மு. அருணா, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, கோயில் செயல் அலுவலர் ம. ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து உணவருந்தினர்.
News August 16, 2025
புதுக்கோட்டை: வங்கி வேலை! APPLY பண்ணுங்க

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 250 வெல்த் மேனேஜர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி.ஏ., மற்றும் PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்த 25 வயது நிறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் இந்த <