News January 26, 2026
புதுக்கோட்டை: வீடு கட்டனுமா இங்க போங்க!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க
Similar News
News January 28, 2026
புதுகை: முக்கிய தகவலை வெளியிட்ட கலெக்டர்

புதுகை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 33 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில், 47,769 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
புதுக்கோட்டை: மாங்கல்ய கனவை நனவாக்க வழி!

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள பிரகதாம்பாள் திருக்கோயில், மாங்கல்ய வரம் அருளும் முக்கிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் அருள்புரியும் அன்னை பிரகதாம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 28, 2026
புதுகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


