News January 6, 2026
புதுக்கோட்டை: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த முத்துடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நேற்று அருண் சக்சேனா (33) என்பவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் அருண் சச்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த வெள்ளனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
புதுகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
புதுக்கோட்டை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1.8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4.நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும். இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
News January 28, 2026
புதுக்கோட்டை: பிடிபட்ட குற்றவாளி – போலீசார் அதிரடி

கறம்பக்குடியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கோ போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். அதனைத் ஹொடர்ந்து, புதுகை மத்திய சிறையில் அடைப்பதற்கு அவரை கூட்டி செல்லும் வழியில் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில், தனிப்படை போலீசார் குற்றவாளியை ஒடிசாவில் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.


