News October 22, 2025

புதுக்கோட்டை மாநகரில் 70 டன் குப்பைகள் அகற்றம்

image

தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாநகரில் பட்டாசு உள்ளிட்ட குப்பைகள் 70 டன் வரை சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மழை பெய்தும் 415 தூய்மைப் பணியாளர்கள் 42 வார்டுகளில் பணியில் ஈடுபட்டனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரிகளில் திருக்கட்டளை பகுதியில் உள்ள மாநகர குப்பைக் கிடங்கில் சேர்க்கப்பட்டன. இந்த பணியை மாநகராட்சி ஆணையர் நாராயணன் கண்காணித்தார்.

Similar News

News October 22, 2025

புதுகை: இந்திய அஞ்சல் துறையியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 22, 2025

புதுக்கோட்டை: அவசர கால உதவி எண் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழை பாதிப்பு குறித்து மட்டுமல்லாது அவசர கால உதவிகளுக்கு 1077 அல்லது 04322-222207 என்ற கட்டுப்பாட்டு மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ளவர்கள் இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

News October 22, 2025

புதுக்கோட்டை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அழிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!