News October 10, 2025
புதுக்கோட்டை மக்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சியிலும் நாளை (அக்.,11) காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சாலைகள் மற்றும் தெரு பெயர் மாற்றம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.25) இரவு 10 மணி முதல் இன்று (அக்.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 25, 2025
புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 25, 2025
பயிர் காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டிற்கான சம்பா நெற்பயிர்களுக்கு ரூ.534 காப்பீடு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். இவற்றை அருகில் உள்ள பொது சேவை மையங்கள், மூலமாகவோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ள வேண்டும். கடைசி நாள் 15.11.2025 ஆகும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


