News December 15, 2025
புதுக்கோட்டை: போக்சோ சட்டத்தில் கைது!

புதுகை மாவட்டம் கீரனூரை சேர்ந்த ஜீவா 27, கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள 8 வகுப்பு படிக்கும் மாணவிக்கு கிண்டல் செய்தும், கையைப் பிடித்து வம்பு இழுத்து உள்ளார். இதனை தட்டி கேட்ட மாணவியின் தந்தையிடம் உன் மகளை கடத்தி சென்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஜீவாவை கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
புதுகை: பைக்குகள் நேருக்கு நேர் மோதல்-ஒருவர் பலி

திருமயம் அடுத்த துளையானூர் சாலையில் தர்மராஜ் (51) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த ராஜேஷ் (18) மோதியதில் படுகாயம் அடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஸ்ரீபிரியா (33) அளித்த புகாரின் பேரில் திருமயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
புதுகை: மனைவியுடன் மனக்கசப்பு-கணவன் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (54). இவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று எல்.என்.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மது போதையில் மதிவாணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி கலா ராணி (43) அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


