News February 26, 2026

புதுக்கோட்டை: பைக் மீது மோதிய சரக்கு வாகனம் – ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் நீர்பழனி, கருதாங்கீப்பட்டியை சேர்ந்தவர் கோபால்(42). இவர் கீரனூர் – திருச்சி புறவழிச்சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலே கோபால் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய மாத்தினாம்பட்டியை சேர்ந்த கணேசன்(26) என்பவரை கைது செய்தனர்.

Similar News

News February 26, 2026

புதுகை: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..!

image

புதுக்கோட்டை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

News February 26, 2026

புதுகை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள், 4322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 26, 2026

புதுகை: ரூ.50,000 சம்பளத்தில் வேலை – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி நிரப்பபட உள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற வங்கி அலுவலராக இருத்தல் வேண்டும். மாத ஊதியம் ரூ.50,000 வழங்கப்படும். இதற்கு மார்.5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!