News November 11, 2025

புதுக்கோட்டை: பைக் மீது டிராக்டர் மோதி விபத்து

image

ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை முன்பு இருசக்கர வாகனத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த நபரின் மீது அடையாளம் தெரியாத டிராக்டர் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்திய வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

புதுகை: சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதல்

image

கரம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரம் அருகே பந்துவகோட்டையைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (53). இவர் அவரது வீட்டின் அருகில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே பைக்கில் வந்த நபர் மோதியதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வன் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

புதுக்கோட்டை மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (நவ.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், மாலையீடு, சிவகாமி ஆச்சி நகர், கடையக்குடி, லெணாவிளக்கு, எல்லைப்பட்டி, பெருஞ்சுனை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் க.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!